அரசு ஊழியர் விடுப்பு

*ஈட்டிய விடுப்பு வரவு வைத்தல்*

*நிரந்தரப்* *பணியாளர்கள்*

 *அரசுப் பணியில் உள்ள நிரந்தர அரசு ஊழியர் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட தகுதிகாண்* *பருவத்தினருக்கு  அவருடைய பணிக்காலத்தில் ஒவ்வொரு சனவரி 1 மற்றும் சூலை 1 தேதிகளில் முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற நிரந்தர ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.*

*அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் ஊழியருக்கும் பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியருக்கும் இதே நடைமுறையின்படி ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பு கணக்கில் இருப்பு வைக்கப்பட்ட பிறகு ஒரு ஊழியர் ஊதியமில்லா விடுப்பில் செல்வாரெனில் 10 நாள் விடுப்புக்கு ஒருநாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.*

*தற்காலிகப் பணியாளர்கள்*
♻♻♻♻♻♻♻♻♻♻

*தற்காலிகப் பணியாளர்களுக்கு ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரிகின்ற ஒவ்வொரு இரண்டு முழு மாதத்திற்கும் 2½ நாள் வீதம் ஈட்டிய விடுப்பு வழங்கப்படும்.*

*கடைநிலை ஊழியருக்கும் தற்காலிகப் பணியாளர்களுக்கான விதி முறைகளின்படியே ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படும். ஆனால் பணி வரண்முறை செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர், அரையாண்டின் துவக்கத்திலேயே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு இவர்கள் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.*


சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு


தமிழக அரசில் பணிபுரியும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களுடைய சொந்த வேலையைக்* *கவனிக்கும் பொருட்டு அவர்களுடைய பணிக்காலம் முழுமைக்குமாக 180 நாட்கள் அரை சம்பள் விடுப்பு* *அனுமதிக்கப்படுகிறது. ஊழியர் இவ்விடுப்பை அனுபவிக்கலாம் அல்லது பணி ஓய்வின்போது காசாக்கிக் கொள்ளலாம்.*

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு
 
தமிழக அரசில் பணிபுரியும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களுடைய சொந்த வேலையைக் கவனிக்கும் பொருட்டு அவர்களுடைய பணிக்காலம் முழுமைக்குமாக 180 நாட்கள் அரை சம்பள் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. ஊழியர் இவ்விடுப்பை அனுபவிக்கலாம் அல்லது பணி ஓய்வின்போது காசாக்கிக் கொள்ளலாம். இத்தொகைக்கு வருமானவரி செலுத்த வேண்டும். ஊழியருக்கு இவ்விடுப்பை அனுமதிப்பதில் சில வரைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1) தகுதிகாண் பருவத்தினருக்கு இவ்விடுப்பு அக்காலம் முடியும் வரை கிடையாது.

2) 10 வருடம் வரை பணிக்காலம் உடையவருக்கு அதிகப்பட்சமாக 90 நாட்கள் இவ்விடுப்பு அனுமதிக்கப்படும்.

3) 10 வருடங்களுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு அதிகப்பட்சமாக 180 நாட்கள் சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு அனுமதிக்கப்படும்.இத்தொகைக்கு வருமானவரி செலுத்த வேண்டும். ஊழியருக்கு இவ்விடுப்பை அனுமதிப்பதில் சில வரைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1) தகுதிகாண் பருவத்தினருக்கு இவ்விடுப்பு அக்காலம் முடியும் வரை கிடையாது.

2) 10 வருடம் வரை பணிக்காலம் உடையவருக்கு அதிகப்பட்சமாக 90 நாட்கள் இவ்விடுப்பு அனுமதிக்கப்படும்.

3) 10 வருடங்களுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு அதிகப்பட்சமாக 180 நாட்கள் சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு அனுமதிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington

வயது என்பதற்கு எந்த வேலியுமில்லை..