காலை எழுந்தவுடன் செய்ய வேண்டியவை!

காலை எழுந்தவுடன் செய்ய வேண்டியவை! செய்யக்கூடாதவை!
நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் காலையில் எழும்போது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்று எல்லோரும் சிந்தித்தது உண்டு. அப்படி உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் :

தினமும் காலையில் எழுந்து, கை, கால்களை முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். பிறகு, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். 

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது, காலையில் வெறும் வயிற்றில் நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதை பொருத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல் நிலையை பொருத்தும், சூழ்நிலையை பொருத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர அட்டவணைப்படி எடுத்து கொள்ளக் கூடாது.

செய்ய வேண்டியவை :

முக்கால் லிட்டர் நீரை முழுமையாக குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராக பிரித்து குடிக்கலாம்.

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெந்தயம் நல்லது. உடல் சு+ட்டை தணிக்கும் அருமருந்தும் இது தான். வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அல்சருக்கு அருமருந்து அருகம்புல் சாறுதான். எனவே அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

இஞ்சி தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பை குறைப்பதோடு, நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. இவற்றுடன் மோர் சேர்த்து குடிப்பது நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று.

உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் உங்களை என்டர்டைன் செய்யும் கொஞ்சம் வித்தியாசமான கேம்மான னுழுஏநு ர்ருNவுஐNபு புயுஆநு யை னுழறடெழயன செய்து விளையாடி மகிழுங்கள்.

னுழுஏநு ர்ருNவுஐNபு புயுஆநு னுழறடெழயன செய்ய

இங்கே கிளிக் செய்யுங்கள்!
செய்யக்கூடாதவை :

இஞ்சியை வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

காபி, டீ போன்ற தேநீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.

பொதுவாக சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது.

தினந்தோறும் உணவு எடுத்துக் கொள்ளும் முறைகள் :

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும். இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி 'காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்" 'மதியம் இளவரசனைப் போல சாப்பிட வேண்டும்" 'இரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்" என்று கூறியுள்ளனர். காலையில் பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington